Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1987ல் அமரரான பிறகு வெளிவரும் முதல் நூல் இது. அவரது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் வேளையில், அவர் எழுதி இன்னும் நூல் வடிவம் பெறாத படைப்புகளனைத்தையும் தொகுத்து தனித்தனி நூலாக வெளியிட முனைகிறோம். குறுநாவல்களே நாவல்களாகி வருகிற இந்த யந்திர உலகில் நா. பா. வின் இரு (குறு) நாவல்கள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. நா. பா. வின் நடையிலும் மாற்றம் கொண்ட நாவல்களிவை. தனது படைப்புக்கள் மூலம் தமிழ் உலகில் நா. பா. என்றும் நின்று வாழ்கிறோர் எனும் உணர்வுடன் இந்நூலை வெளியிடுகிறோம்.