LIBROS DEL AUTOR: na parthasarathy

10 resultados para LIBROS DEL AUTOR: na parthasarathy

na parthasarathy Eliminar filtro Quitar filtros
  • Sulaba
    Na. Parthasarathy
    நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1987ல் அமரரான பிறகு வெளிவரும் முதல் நூல் இது. அவரது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் வேளையில், அவர் எழுதி இன்னும் நூல் வடிவம் பெறாத படைப்புகளனைத்தையும் தொகுத்து தனித்தனி நூலாக வெளியிட முனைகிறோம். குறுநாவல்களே நாவல்களாகி வருகிற இந்த யந்திர உலகில் நா. பா. வின் இரு (குறு) நாவல்கள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. நா. ப...
    Disponible

    30,12 €

  • Poim Mugangal
    Na. Parthasarathy
    1975 முதல் 1979 செப்டம்பர் வரை சில ஆண்டுகள் தீபத்தில் தொடர்ந்து பிரசுரமான இந்நாவல் இப்போது தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக புத்தக வடிவில் வெளி வருகிறது.பாசாங்குகளும், போலித்தன்மைகளும் நிறைந்த மனிதர்கள் சமூக வாழ்வில் தென்படுகிற வரை அப்படி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கும் - அவை நிஜத்துக்கு அப்பாற் பட்ட - நிஜத்தை விட அதிகமான பொய்ம் முகங்களாகவும் இருக்கும்.அந்தப் பொய்ம்...
    Disponible

    32,49 €

  • Pirantha Mann
    Na. Parthasarathy
    பிறந்த மண் என்ற நெடுங்கதையைப் படித்து மகிழ்ந்தேன். கதைக் கோப்பு புதுமையாகவும் இயற்கை நலம் மேவியதாகவும் அமைந்திருக்கிறது. பாத்திரங்களின் இரண் டோர் அம்சங்களே சித்திரிக்கப் பெற்றுள்ளனவென்றாலும் அவர்கள் நம்முன் உயிர்த் தளிர்ப்புட்ன் நடமாடுகின்றனர்.வாழ்க்கைத் துன்பங்களை மறப்பதற்காக இன்ப உலக மொன்றைப் படைத்துத் தரும் பொழுதுபோக்கு இலக்கிய மாகப் பிறந்த மண் உருப் பெறவில்லை. பகற் கனவிலோ உ...
    Disponible

    33,49 €

  • Vetri Muzhakkam
    Na. Parthasarathy
    வெற்றி முழக்கம் ஓர் அழகிய பெருங்காப்பியத்தின் உரைநடைக் கதை. ஒரு நாவலைப் போன்ற சுவையான அமைப்பும், கதை நிகழ்ச்சிகளின் திருப்பமும், இந்நெடுங்கதை எந்த மூலத்திலிருந்து உரைநடை யாக்கப்பட்டதோ அந்த மூலக் காப்பியத்திலேயே செம்மையாக அமைந்துள்ளன. நான் செய்ததெல்லாம் அவற்றை நல்ல உரை நடையில் கதையாக்கிய வேலை ஒன்று மட்டும் தான். ...
    Disponible

    44,46 €

  • Nisabdha Sangeetham
    Na. Parthasarathy
    அரசியல், அரசியலால் பாதிக்கப்படும் சமூக நியாயங்கள், மனிதர்கள் இவர்களைப் பற்றி எழுதுவதே தகாத காரியமாகக் கருதப்படுகிறது. எழுதுபவர்களால் கூசி ஒதுக்கவும் படுகிறது.கல்லூரி நாள் தொடங்கி நம் இளைய தலைமுறையை அரசியலும், அரசியல் தலைவ்ர்களும் எவ்வளவுதான் பாதித்தாலும் அதைக் கதையாக எழுத மட்டும் தயங்குகிறார்கள். வாழ்வில் நடக்கலாமாம். ஆனால் கதையில் மட்டும் எழுதக் கூடாதாம்.இந்தத் தயக்கத்தைக் கூட...
    Disponible

    33,55 €

  • Nenjakkanal
    Na. Parthasarathy
    '...ஆறாதே நாவினாற் சுட்ட வடு' என்று வள்ளுவப் பேராசான் வற்புறுத்துகிறார். ஏன்? குற்ற உணர்வு நெஞ்சில் கனலாக எரிந்து கொண்டிருப்பதால்தான் அந்த வடு ஆறாத புண்ணாக நிலைத்துவிடுகிறது. அந்த நெஞ்சக் கனலை அவித்துவிடும் ’ஆற்றல்’ உடையவர்களுக்கும், அல்லது அக்கணலே தோன்றாத உள்ளம் படைத்தோர்க்கும் ’நாவினாற் சுட்ட வடு’ புண்ணாவதில்லை என்பது உலகம் கண்ட அனுபவ உண்மை.மனச்சாட்சியின் குரலுக்குச் செவி சாய...
    Disponible

    30,27 €

  • Karsuvargal
    Na. Parthasarathy
    1960-க்கும் 75-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்தானங்களாக முன்பு இருந்த பழைமையான ஊர்கள், பழைமையான குடும்பங்கள் பிரதேசங்களைக் கவனித்த போது இந்தக் கதை என் மனதில் உருவாகத் தொடங்கியது. ’கற்சுவர்கள்’ என்ற தலைப்பை ’ஸிம்பாலிக்’ ஆகக் கொடுத்திருக்கின்றேன். முதலில் இதை ஒரு சிறுகதையாக எழுதினேன். கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.ராஜமான்யம், சமஸ்தான அந்தஸ்து, எல்லாம் பறி போன பிறகு ’அரச குடும்பம...
    Disponible

    29,13 €

  • Kabadapuram
    Na. Parthasarathy
    இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே ’கதை முகம்’ என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். ’முகஞ் செய்தல்’ - என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து வளரும் நிலை, என்றெல்லாம் பொருள் விரியும். இந்த மாபெரும் வரலாற்று ஓவியத்தை இங்கு முகம் செய்யும் கால தேச இடச் சூழ்நிலைகளைக் கதை தொடங்கும் முன் சுர...
    Disponible

    28,10 €

  • Anicha Malar
    Na. Parthasarathy
    இந்த நாவல் நான் எழுதியிருக்கும் பிறநாவல்களிலிருந்து பலவிதங்களில் தனியானது. அளவில், முறையில், அணுகுதலில், பாத்திர அமைப்பில் எல்லாவற்றிலும்தான். இது ’அலை ஒசையில்’ தொடராக வெளிவந்து கொண்டிருக்கும்போது ’எங்கோ நிஜமாக நடந்த கதை போலிருக்கிறதே’ என்று சிலர் அடிக்கடி சொன்னார்கள். ’எங்கேனும் நடந்ததோ அல்லது நடக்கிறதோ?’-என்ற எண்ணத்தை உண்டாக்கும் தன்மையே ஒரு கதையின் யதார்த்த நிலைக்குச் சரியான...
    Disponible

    28,14 €

  • Anugraha
    Na. Parthasarathy
    தமிழில் அரசியல் நாவல்கள் மிகவும் குறைவு. அத்தகு அரசியல் நாவல்களிலும் சமகால அரசியல் நாவல்களாக-அரசியலை விமர்சிக்கும் நாவல்களாக அமைவது அருகிய வழக்கமாக உள்ளது. அமரர் நா. பார்த்தசாரதி இந்த அருகிய வழக்கைச் செம்மையாகச் செய்துள்ளார். ’சத்திய வெள்ள’த்தில் தொடங்கிய இப்பணியை அவர் பல நாவல்களில் தொடர்ந்து செய்தார். இப்போது வெளிவரும் அநுக்கிரகா நாவலிலும் சமகால அரசியலை விமர்சித்து நா.பா. எழுத...
    Disponible

    23,69 €