Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றி, விதமான தமிழ் நடைகள் விரிந்து வருவது மிகவும் விரும்பத் தகுந்த விளைவு. நாளுக்கு நாள் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகின்றது. அதற்குக் காரணம் பாமர மக்களிடையிலும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும், சஞ்சிகைகளையும் படிக் கிறவர்களுடைய தொகை பெருத்து வரு வதாக இருக்கலாம். எழுத்துக்களின் இனங்களைப் பிரித்து அறிந்து பெருமை காணக்கூடிய திறமையும் வாசகர்களிடையே வளர்ந்திருக்கிறது. அந்த அறிவு பெண் மக்களிடையேயும் பெருகியிருப்பது பெருமை தரக்கூடியது. அதனால் தினுசு தினுசான எழுத்தாளர்களுக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது. சஞ்சிகைகளும் அதிகமாக சஞ்சரிக்கின் றன. அச்சடிப்போரும் வெளியிடுவோரும் பற்பல நூதனமான வண்ணங்களை நுழைத்து வருகிறார்கள். பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் இவற்றுக்கு அவசியமான எழுத்தாளர்களோடு கூடவே சித்திரக்காரர்களும் சிறப்படைந்து வருகிறார்கள். போட்டோ கிராவ்’ வேலையும் ’ப்ளாக்’ செய்யும் வேலையும் எழுத்தாளர் வேலைக்கு ஏற்றமுண்டாக்கி அதனால் தாமும் வளர்ச்சியடைகின்றன. இவைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும் போது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பாக வசன நடை வளர்ச்சிக்கு நல்ல காலம் வந்திருக்கிற தென்றே நம்பலாம். எழுத்தாளர் என்று சொல்லும் போது இயல், இசை, நாடகம் என்ற மூன்று நடைகளையும் எண்ணித்தான் பேசுகின்றோம். இந்த மூன்றில் எந்த நடைக்கானாலும் கல்வியறிவும் கற்பனா சக்தியும் கலைத் திறமும் அவசியம். நாடக இலக்கியம் நடிப்புக்கென்றே எழுதப்படுவதாகையால் தினசரி வாழ்க்கையில் எடுத்தாளப்படுவதில்லை.