மிக நிச்சயமாக இது நாவல் அல்ல. சிறுகதையோ, குறுநாவலோ, நெடுங்கதையோ கூட அல்ல. எனில் கட்டுரைத் தொகுப்பா, ஒரே பொருளில் அமைந்த நீண்ட கட்டுரையா, தன் வரலாறா என்பீரானால் மன்னிக்கவும். அதுவும் அல்ல.புழக்கத்தில் உள்ள எந்த ஓர் எழுத்து வடிவிலும் அடங்காத நூதனமே இதன் தனிச் சிறப்பு. தன் வரலாற்றுச் சாயலில் அமைந்த புனைவு என்றோ, கற்பனை கலந்த சுய சரிதமென்றோ சொல்லிக்கொள்ள விரும்பினால் உங்கள் இஷ்டம்.ஆனால் ஓர் எழுத்தாளனைக் கதாநாயகனாக வைத்து சிரிக்கச் சிரிக்க எழுதப்பட்ட முதல் தமிழ்ப் பிரதி இதுதான். யார் கண்டது? உலக அளவிலேயேகூட முதலாக இருக்கலாம்.