எனக்குச் சின்ன வயதிலிருந்தே அழகான பறவைகள் விலங்குகள் என்றால் மிகப் பிடிக்கும்.பச்சைக் கிளி, அணில், புறா, சிட்டுக் குருவி இவற்றைப் பார்க்கும் போது என் மனம் இன்பத்தால் துள்ளிக் குதிக்கும். பூனைக் குட்டிகளைக் கண்டால் எனக்கு மிகுந்த ஆசை. ஆனால் வீட்டில் பூனை வளர்க்கக் கூடாதென்று பெரியவர்கள் சொன்னதால் விட்டு விட்டேன்.நாய்க்குட்டி ஒன்று தெருவில் கிடந்தது. அழகான நாய்க்குட்டி! அதை நான் வீட்டுக்குத் தூக்கி வந்தேன். அம்மா அதை வெளியே தூக்கி எறியும்படி கூறினாள். ஆனால் அப்பாதான், ’ஆசையாக இருக்கிறான்; வைத்துக் கொள்ளட்டுமே’ என்றார்.அந்த நாய்க்குட்டியை நான் அன்பாக வளர்த்து வந்தேன். அதற்குக் கண்ணன் என்று பெயரிட்டேன். ’கண்ணா கண்ணா’ என்று அன்பாகக் கூப்பிடுவேன்.