Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
அரச மரம் சலசலத்துக் கொண்டிருந்தது. அதனடியில், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து டீ குடித்தபடியே, செய்திகளை முந்தித் தரும் நாள் தாள் ஒன்றில் ஆழ்ந்திருந்தார் ஆலங்காட்டுச் சாமியார். ’கமலா (வயது இருபது) என்ற பெண்ணும் ஜெயசந்திரன் என்ற வாலிபனும் (வயது 27) ஒட்டல் அறைக்குள் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்’ என்று வாய் விட்டுப் படித்த சாமியார், 'பொழுது விடிஞ்சா ஒரு நல்ல செய்தி கிடையாதா? தற்கொலை செய்து கொண்ட ஜோடி, தடம் புரண்ட ரயில், ஜாக்பாட் மாரடைப்பு, வெளி நடப்பு, கதவடைப்பு, கடத்தல், பதுக்கல், கொள்ளை, கொலை, சதக்! சதக்..! சிரித்துக் கொண்டார். அவர் சிரிக்கும்போது கண்கள் இடுங்கி விழிகளும் சேர்ந்து சிரிக்கும்.