Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
மேல்மட்டத்திலிருக்கும் அதிகாரவர்க்கத்தினர் போலீஸ் தலைமையை ஓரங்கட்டி, தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் பெரிதும் கெடுதல் ஏற்படக் காரணமாயிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். மேலும் இதன் விளைவுகளை அனைவரும் இன்று பார்க்கிறோம் இந்திய காவல்துறை மக்களின் நடுவில் மிகவும் நம்பிக்கை இழந்து நிற்கிறது.காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் மற்றும் சில அதிகாரவர்க்கத்தினரால் (இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடைமுறைப்படுத்தவேண்டிய) காவல்துறை மறுசீரமைப்புப் பணிகள் பயனற்றதாக்கப்பட்டதை, நேரடி சாட்சியாக இருந்து மனம்திறந்து எழுதியிருக்கிறார். இந்த முழுவதுமாக சரிபார்க்கப்பட்ட புதிய பதிப்பு இதனைச் சிறப்பாக வழங்கியிருக்கிறது. இவர்கள்தான் காவல்துறை ஆணையாளராக கிரண் நியமிக்கப்படுவதையும் தடுத்தனர். இத்தகைய நாசவேலைகள் அவரை தளைகளை உதறிவிட்டு விட்டு விடுதலையாக வற்புறுத்தின. 35 வருட சிறப்புக்குரிய பணிக்குப் பின், கிரண்பேடி அந்த வேலையைவிட்டு விலகுவதென முடிவு செய்தார். அவர் இந்த அமைப்பை அடிமையாய் வைத்திருக்கும் நபர்களுடன் இனியும் பணியாற்றமுடியாதென நம்பினார். இந்த நாசகாரக் குழுவின்கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கப் போவதில்லை என மனதில் தெளிவாய் முடிவுசெய்தார்.வளர்ச்சி குன்றியவர்களையும் நசுக்கப்பட்ட நீதியையும், அடக்கப்பட்ட முன்னெடுப்புகளையும் தவிர இவர்கள் வேறென்ன வழிகாட்டுதலையும் தலைமையையும் தந்துவிடமுடியும்? அவர் இத்தகைய ஐயத்துக்குரிய வரலாற்றில் பங்குபெற விரும்பவில்லை.அவரே உறுதியளிப்பதுபோல்; எனது சுய மரியாதை, எனது உள்ளுறைந்த நீதியுணர்வு மற்றும் வாழ்க்கையின் மீதான எனது நம்பிக்கைகள் மற்றும் மதிப்பீடுகள் இவை, ஏற்கனவே எனது வளர்ச்சியைத் தடைசெய்துகொண்டிருந்தவ