Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
மலை உச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச் சென்று கொண்டே இருக்கும் இடையறாத மனவெழுச்சி பொங்கிப் பெருகி ஓடும் ஒரு கதைசொல்லியின் குரல். அந்த நதியில் பழுத்த இலைகளை மிதந்து செல்லும் எதிர்பாரா தக்கை நிகழ்வுகள். தண்ணென்று கனிந்த நிலவாய் ஆழத்தில் எதிரொலிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு. பெண் உடல் பிம்பம் உடைபடும் தருணங்களும், அதனடியில் இழுபடும் அறிந்திடாத அறத்தின் கயிறுகளும் நூறாயிரம் அடியார்களும் அவளது தனிமையின் நதியாய் பாய்ந்திட தூண்டுகின்றன. ஒருமுறை கால் வைத்த கணத்தில் மீண்டும் கால் வைக்க முடியாத பேருவகை வாழ்க்கை. கதையின் உள்ளே கதை என்று சுருள் சுருளாய் கதை வெளிக்குள் அழைத்துச் செல்லும் இடையறா இயக்கத்தின் குறியீ டே அழியாச்சொல். அழியாச்சொல், குட்டி ரேவதியின் முதல் நாவல்.