Aravindan Neelakandan / அரவிந்தன் நீலக
Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.• லெனின், ஸ்டாலின், மாவோ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எல்லோருமே எப்படி ரத்தம் தோய்ந்த வரலாற்றை எழுதினார்கள்?• எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள்?• புக்காரினும் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்?• சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா?• ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்?• ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா?• வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா?வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.• கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?• நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன?• தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது?• கம்யூனிஸக் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன?இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.வெறும் வாய்ப்பந்தல் போடாமல், சிவப்புப் பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன்.