Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
சங்க கால புலவர்கள் தொட்டு இன்றைய நாள் வரையிலும் நட்பை பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லையெனலாம்...மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக நண்பர்களை குறிப்பிட்டலாம்..ஆம், அதியமான் - அவ்வை, கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், பாரி- கபிலர் என நீளும் இந்த பட்டியல்.நண்பனுடைய இன்பத்தில் மட்டுமே பங்கு கொள்ளாமல் அவனுடைய துன்பத்தையும் தன்னுடையதாய் எண்ணி, தானாய் முன்வந்து உதவுபவனே உண்மையான நண்பன்.ஆண் பெண் நட்பிற்கு ஓர் உதாரணமாக,கர்ணனையும் பானுமதியையும் கூறலாம்! கள்ளம் கபடம் அற்ற தன் பிரிய மனைவி மற்றும் தன் உயிர் நண்பனை சந்தேகிக்காது இருந்த துரியோதனன் உயர்ந்தவன் எனில், அவனின் இந்த உயர் குணத்திற்காக தன் உயிர் பிரியும் வரையிலும் கூட துணையாய் நின்ற கர்ணணின் நட்பு அதைவிட உயர்ந்தது!!இத்தகைய நல்லதொரு உயர் நட்புக்களின் பட்டியலில் சேர்ந்திருக்கும் நம் இக்கால கவிநண்பர்களின் கவிதைகளை சமர்பிக்கிறேன்!!