Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
சகோதரிகளே! சகோதரர்களே! உண்மைக்குத்தாரமாக, நம்மை நாம் திருத்திக்கொள்ள நினைத்தால் நம்மைப் பற்றி இருகக்கட்டி பிணைத்துள்ள எல்லா காரண காரியங்களையும் துருவித்துருவிப் பார்த்து, இது இன்னது இது இனியது, இது தக்கது இது தகாதது, என்று சாதிப்போமன்றோ ? ஏனென்றால் நமது உரிமை, நமது பெருமை என்பதில் அவ்வளவு அபேக்ஷை உண்டு. ஒரு உரிமையை அடையவும் அதனால் தன்னை சுத்தப் படுத்திக்கொள்ளவும் அறிவுதான், ஆதியாகும். ஆகையால், நாம் கடவுளை அடைய, திருநீற்றால் நெற்றியை மட்டும் சுத்தப்படுத்திக்கொண்டு, தெருத்தெருவாகத் திரிந்தோ, அல்லது திரியா மலோரிடத்தில் ஒடுங்கியோ, இருந்து கொண்டு, வாக்காலுங் காயத்தாலும் பல பாபங்கள் செய்துவந்தால், நமது ரிமையாகிய கடவுளும், நாம் சுத்தப்படுத்திக்கொள்ள அணியும் விபூதியும் என்னச் செய்யும்? மனதில் கடவுள் இருக்கிறார். முகத்தில் விபூதி யிருக்கிறது. இவ்விரண்டு மிருப்பதாலன்றோ நாம் பயப்படாமல் பாபஞ்செய்கின்றோம்? எப்பபடியும் நம்மை விபூதி கைவிடாது. சிவனே வந்து பவுத்தர்களை அழித்துள்ளார் என்ற விசுவாசம் எந்த நியாயங்களையும் விலக்கி அநியாயங் களில் நடக்கவைக்கின்றன. அந்த அநியாய நிமித்தமே சாம்பலை முகத்தில் பூசுகின்றார்கள். சாம்பலால் ஊமைப்பெண்ணைப் பேசவைக்கவில்லையா? அழியா சிவபிரான் அழியும் சாம்பல ணியவில்லையா? என்பார்கள்.