Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
எல்லோரும் தங்கள் வீட்டில் செய்துமகிழும் வகையில் எளிமையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். வேதங்களிலும் நாதங்களிலும் கடவுள் வாழ்கிறான். அந்தப் பரம்பொருளை உங்கள் இல்லங்களுக்கும் எழுந்தருளச் செய்து ஒரு பரமானந்த ’எனர்ஜி’யைக் கொண்டுவருவதே இதன் நோக்கம். இத்தனை எளிய முறையில் 16 வகை பூஜைகளையும் சொல்லித்தரும் நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல்முறை. நூல் ஆசிரியர் ஸ்வாமி நித்ய முக்தானந்தா ஆர்ஷ வித்யாவ்ருக்ஷம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி, கடந்த பத்து வருஷங்களுக்கும் மேலாக ஈரோட்டிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் வேதாந்த வகுப்புகள், சம்ஸ்க்ருத வகுப்புகள், சிறுவர்களுக்கான வேத பாரம்பரிய கல்வித் திட்டம் ஆகியவற்றை நடத்திக்கொண்டிருக்கிறார். இன்னொரு சிறப்பு உண்டு இவருக்கு. ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் சீடர் இவர்!