Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
சுதந்திரத்திற்கு முன்பு நம்நாட்டில் இருந்த மக்களின் வாழ்க்கைமுறை, உணவு பழக்கம், கலாச்சாரங்கள், கூட்டுகுடும்ப முறை, அக்காலம் நாம் உபயோகித்த பொருட்கள் என காலச்சக்கரத்தில் அழைத்து செல்கிறார். பயங்கரமான தீவிரவாதியை சின்ன பெண்ணான வைதேஹி வீழ்த்தியது எப்படி என அறிய படியுங்கள்!’வைதேஹி’ நூலின் ஆசிரியர் கீதா கண்ணனின் முதல் நாவலாகும். எழுத்தின் மேல் மிகுந்த ஈடுபாடுடைய இவர் சிறு கதைகள், கவிதைகள் முதலியன வெளியிட்டு இருக்கிறார். தனது எழுபதாவது வயதில் தொழில் நுட்பங்களை கற்று கொண்டு. சங்க பலகை எனும் எழுத்து தளத்தில் எழுத ஆரம்பித்த இவர் தற்போது தன்னுடைய முதல் நாவலை எழுதியுள்ளார். விரிவாகவும், சுவைப்படவும், கவிநயத்தோடு சொல்லுவதில் வல்லவர். சுதந்திரம் கிடைக்கும் முன்பு நாட்டின் நிலமை, அக்கால வாழ்க்கைமுறை போன்றவற்றை நயம்பட எழுதியுள்ளார். இசையிலும், படிப்பதிலும் பேரார்வம் கொண்ட இவர் சிறந்த வீணைக் கலைஞர்.