Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
ஒரு கடவுளைப் போலவோ, குழந்தையைப் போலவோ சிந்திக்க முடிந்துவிட்டால் மனித வாழ்வில் சிக்கல்கள் அதிகம் இராது. துரதிருஷ்டவசமாக நாம் காலம் முழுதும் இரு நிலைகளுக்கு இடையில் வாழ்ந்து கடந்துவிடுகிறோம்.ஆனால் ஒரு கடவுளின் சிரமங்கள் எப்படிப்பட்டவை என்று யாருக்குத் தெரியும்? குழந்தைகளின் அலையடிப்புகளைத்தான் நாம் பூரணமாக அறிந்திருக்கிறோமா? இந்நாவல், கடவுளின் விரலைப் பிடித்துக்கொண்டு குழந்தையின் மனத்தை வரைந்தெடுக்கப் பார்க்கிறது.திருக்கோவிலூரில் பிறந்த நஸீமா ரஸாக், மெட்ராஸ் பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக உள்ளார். என்னைத் தேடி, மராம்பு என இரண்டு நாவல்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. ஹீலிங்-தியான ஆசிரியர். வசிப்பது துபாயில். வாழ்வது எழுத்தில்.