Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், நெருப்பிலும் உலவும் வல்லமை கொண்டார்கள். அத்தனை ஆற்றல்களையும் தாம் அடைந்தது போலவே மனித குலம் அடைய வேண்டும் என ஓயாமல் உபதேசித்தார்கள். அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களும், வாழ்க்கை அனுபவங்களும் அலாதியானவை. சுவையானவை.நூலாசிரியர் உமாசம்பத் குமுதம் இதழில் உதவி ஆசிரியராக இருந்தவர். மர்மயோகிகளின் மாய உலகுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்.