Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
மகாபாரதம் வடமொழியிற் பதினெட்டுப் பருவமுடையது. தமிழிற் பெருந்தேவனார் கி. பி. தொள்வது நூற்றாண்டிற் பாரதவெண்பா இயற்றினார். அதிற் சிறிது பாகமே நம் கைக்கெட்டியது ; எஞ்சியவெல்லாம் அழிந்தொழிந்தன. அதன்பின் கி.பி. பதினைவது நூற்றாண்டில் வில்லிபுத்தூரர் விருத்தப்பாவால் மகாபாரதம் வகுத்தனர். இவர், பதினெட்டுப் பருவத்தில் முதற்பத்தையே கொண்டார் ; அவற் அள்ளுங் கிளைக்கதைகளை ஒழித்தார். இவரியற்றிய மகாபாரதம் சொற்சுவை பொருட்சுவை கொண்டது. வாசிக்க வாசிக்க மேலும் மேலும் இன்பந்தருவது ; ஆயினும் பத்திய ரூபமுள்ள இந்நூல் தமிழ்ப்பயிற்சி குறைந்த பலருக்குப் பயன்படாததாயிற்று.அன்றியும், இவற்றுள் சிறுவர்சிறுமியர் கற்கலாகாத கதைகள் ஆங்காங்கு காணலாம்.இவற்றையெல்லாம் நீக்கி, கதையைச்சுருக்கி எழுதியது இந்நூல்.