Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
அலங்கார மாலையில் இது ஐந்தாவது புத்தகம். கந்தர் அலங்காரப் பாடல்களில் ஆறு (21-6) இதில் விளக்கம் பெறுகின்றன. தேனாம்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக் கோயிலில் வியாழன் தோறும் மாலை 7 மணி முதல் 8-30 மணி வரையில் நடைபெறும் சொற்பொழிவுகளே இப்போது புத்தகங்களாக உருவாகின்றன என்பதையும், இத் துறையில் பேருதவி புரிகிறவர் அன்பர் ஸ்ரீ ஆனந்தன் என்பதையும் முன்பே தெரிவித்திருக்கிறேன். சொற்பொழி வாதலின், பல பல கருத்துக்களை விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் நேர்கிறது. எழுத்தாக இருப்பின் இன்னும் சுருக்கிக் கொள்ளலாம். ஒரு கருத்தை விளக்குவதற்குக் காட்டும் மேற்கோளின் மூலத்தை மாத்திரம் சொல்லி விட்டுவிட்டால், பேச்சின் வேகத்தினிடையே மேற்கோளின் பொருத்தம் தெளிவாக விளங்காது. ஆகையால் மேற்கோளையும் விளக்கி, இன்னதற்கு அது மேற்கோளாவது என்பதையும் புலப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த விரிவுரைகள் கந்தர் அலங்கார விரிவுரைகள் என்று சொல்வதோடு, ஒரு வகையில் நம்முடைய சமய நெறியைப்பற்றிய விரிவுரைகள் என்று கூடச் சொல்லலாம். ஒரு பாடலில் தலைமையான கருத்து ஒன்றாக இருந்தாலும் வேறு கருத்துக்களும் அதனைச் சார்ந்திருக்கும். அவற்றையும் விளக்க வேண்டும்; அப்போது வேறு கருத்துக்களும் இடையிலே வரும்.