Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
கோட்பாடுகள் தர்க்கம் வழி சென்றுசேரும் இடங்களைக் கவிஞர் கவிதை வழியே எப்படிச் சென்றுசேர்கிறார் என்பதைப் பெருந்தேவியின் இக்கட்டுரைகள் காட்டுகின்றன. வாசகராக எனக்குக் கோட்பாடுகளின் மீதான ஐயத்தையும் மனவிலக்கத்தையும் கடப்பதற்கு உதவுவதோடு, அவை எப்படி நல்ல கவிதைகளை அடையாளம் காணவும் பொருளுணர்ந்துகொள்ளவும் கைவிளக்காக அமையக்கூடும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. படைப்பு மனத்துக்குக் கோட்பாடு எதிரானது எனும் கற்பிதத்தையும் இந்நூல் தகர்க்கிறது.- சுனில் கிருஷ்ணன்