Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இந்த தொகுப்பில், ஒவ்வொரு கதையும் மனித வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு அவற்றை கையாளும் அழகும் மிளிரும். கதைகள், பல நல்ல விஷயங்கள் சொல்ல ஏதுவாகும். நேரடியாக பகிர முடியாதவற்றைக்கூட கதைகளின் மூலம் சொல்வது நம் மரபு. அந்த வகையில் இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தி சொல்லவே! எழுத்தாளர். உஷா சங்கரநாராயணன், ஒரு முதுகலைப் பட்டதாரி. எல்ஐசி நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்தார். எழுத்தின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மத்தியமர் எனும் இணையதளத்தின் மூலம் எழுத ஆரம்பித்தார். வாழ்வியல் அணுகுமுறைகளின் பிரதிபலிப்பே இந்த கதைகள். இவர் நல்ல சமூக சிந்தனையாளர். இயற்கை, மனிதநேயம், நாட்டுப்பற்று போன்ற நல்ல சிந்தனைகளை உள்ளடக்கிய இவரது முதல் கதைத் தொகுப்பு கண்மணிகதைகள்.