Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை.ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து அதிரடியாகப் பேரம் பேசியிருக்கிறார்கள். அடிமை வியாபாரத்திலும் ஆள், பொருள் கடத்தலிலும் கொடி கட்டிப் பறந்திருக்கிறார்கள். கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம் என்று நிலத்தில் நடைபெறும் அத்தனை அத்துமீறல்களையும் நீரில் நடத்தியிருக்கிறார்கள். இன்று பஞ்சத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வந்து நிற்கிறது சோமாலியக் கடற்கொள்ளை பற்றிய தலைப்புச் செய்திகள்,கடல் கொள்ளையர்களின் முற்றிலும் புதியதொரு உலகத்தை கண்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர் பாலா ஜெயராமன், இவர் விக்கிபீடியாவில் வரலாறு, பொருளியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.