டாக் Dr. K.S. Jeyarani Kamaraj / டாக்டர் T. Dr. T. Kamaraj
Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா?குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா?கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் பலவற்றுக்கு விளக்கமளிக்கிறது இந்தப் புத்தகம். மலட்டுத்தன்மையைப் போக்கும் நவீன சிகிச்சைகள் பற்றி அனுசரணையுடன் எளிமையாக எடுத்துச்சொல்லும் நூலாசிரியர்கள், ’எல்லோருக்கும் குழந்தை பிறக்கும்’ என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்தின் மூலம் விதைக்கின்றனர். நூலாசிரியர்கள், டாக்டர் டி. காமராஜ், டாக்டர் கே. எஸ். ஜெயராணி இருவரும் கருவாக்கம் மற்றும் பாலியல் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். சென்னையில் உள்ள இவர்களது ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தைப்பேறுக்கான சிகிச்சை, ஆலோசனைகளை வழங்குகின்றனர். கருப்பை இல்லாத பெண்ணுக்கு செயற்கை கருப்பையை உருவாக்கி குழந்தை பெறச் செய்து இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.