Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.ச.ரா. எழுதியிருந்தலும் அவருடைய ’பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய ’புத்ர’ மற்றும் ’அபிதா’ நாவல்கள் பொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரைநூல் ’சிந்தாநதி’ அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.ச.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமனியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும், கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார்.